Wednesday 31 July 2013

வள்ளுவம் என்பது எனது மதம் திருக்குறள் அதன் வழிக்காட்டி

வள்ளுவத்தை வள்ளுவம்பேசுகிறது...
===============================
என் அறிவார்ந்த சமுதாயமே.....
வணக்கம்,

அன்பையும் அறிவையும் மட்டுமே பகிர்ந்து பழகிய வள்ளுவமே...
இன்றைய அவசரக்காலத்தில் பணத்தைமட்டுமே தேடி அலைகின்ற மனித கூட்டங்களோடு ஒன்றாக கலந்து ஓடிகொண்டுதான் இருக்கின்றோம்.

இப்படிபட்டக்காலத்திலும் கலாச்சாரம் பண்பாட்டைக் கட்டிக்காத்து
அதனை நம் சந்ததிகளுக்கு எடுத்துச்செல்ல முற்படுகின்றவன்தான்
உண்மையான அறிவுடையவன் அறிவார்ந்தக் குலத்தைச் சேர்ந்தவன்

என்னதான் அறிவுடையவனாக சுயமாக சிந்திக்கும் திறமை இருந்தாலும் அவன் எத்தகைய கூட்டத்தோடு, நண்பர்களோடு, இனத்தோடு சேர்கின்றானோ அவற்றின் தன்னைமயில் அவன் அங்கு மாறிப்போகின்றான்.

ஓரு அறிவில்லாத கூட்டத்தோடும் சமுதாய அக்கறையற்ற கூட்டத்தோடும் சேர்கின்றவன் தனது அறிவை இழப்பதோடு அல்லாமல் நல்லவர்களுக்கு உதவாது மக்கிப்போகின்றான் 

என்ன அழகாக எம் குலத்தோன்றல் திருவள்ளுவர் சொல்கின்றார்
இப்படிபட்டவர்களின் பண்பை

குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.


பொருள்:

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.


Translation:

Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.

Explanation:
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

இங்கு வள்ளுவனை வள்ளுவக் குலத்தவனை சொல்கின்றார் திருவள்ளுவர் என்ன சொல்கின்றார்...
ஒருவன் நல் வாக்கு உடையவனனாக சமுதாயத்திற்கு நல் வழிக்காட்டுபவனாக இருக்க. அவன் அறிவானவனாக தன்னை காட்டிக்கொண்டாலும் அவன் எத்தகைய குலத்தில் இனத்தில் கூடியிருக்கின்றானோ அதன் தன்னைமயில்தான் அவனது அறிவு வெளிப்படும் என்கிறார் 

வள்ளுவன் வாக்கில் சிறந்தவன்,வள்ளுவன் பழகுவதில் இனிமையானவன், வள்ளுவன் சமுதாயத்தை நல் வழிபடுத்துபவன், வள்ளுவன் நேசிக்த்தெறிந்தவன், வள்ளுவன் நேர்மையானவன்,

இப்படிபட்ட குணம் பண்பாடு கலாச்சாரம் வள்ளுவனுக்கு எப்படிவந்தது
வள்ளுவத்தில் தோன்றியதால் வள்ளுவ மதத்தை பின்பற்றுவதால்
வள்ளுவன் வள்ளுவனாக வாழ்வதால்.... 

இப்படிப்பட்ட எம் குலம் இந்தமண்ணில் உள்ளதால்தான் 
அன்றும் இன்றும் இனி என்றும் இந்த பூமி உயிர்வாழ்கிறது

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை

V.J.Hariharasuthan Valluvan

No comments:

Post a Comment