Thursday 1 August 2013

வள்ளுவத்தை வள்ளுவம்பேசுகிறது.. பதிவு (01.08.2013)
===========================================
என் அறிவார்ந்த சமுதாயமே...
வணக்கம்,

இன்று வள்ளுவம் பேசுவது...
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல்.
அதிகாரம்: புலவி நுணுக்கம்.

உங்கள் எண்ணம் புரிகிறது உண்மைதான் பெண்மையை போற்றிய பெருமைமிகு தெய்வப்புலவன் வள்ளுவன்

தமிழ் பெண்களின் கற்பு பற்றிய புலவியல் என்னதான் பெண்கள் இன்றைய கலாச்சார புதுமையில் புகுந்துகொண்டாளும் தமிழ்பெண்களின் பண்பாடு இன்றளவும் குறையவில்லை என்றுதான்
சொல்ல வேண்டும்

ஏன் எனில் இங்குதான் காதல் இன்னும் உடலளவு என்று இல்லாமல்
மனதளவு உணர்வுபூர்வமான ஒன்றாக கருதுகிறார்கள்

என்ன அழகாக அய்யன் சொல்கிறார்

குறள் 1311:

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

மு.க.உரை:
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

மு.வ உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

Translation:
From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace.

Explanation:
You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.

கற்பு என்பது பெண்களுக்கும் மட்டுமில்லை அது ஆண்களுக்கும் பொதுவானது என்ற பகுத்தறிவுபுலவன் வள்ளுவனேயன்றி வேறுயாரும் இலர்

என்னதான் தான் நேசிக்கின்ற ஆண்மகனாக நீ இருந்தாளும் கம்பீரமான தோள்களையும் தினவெடுத்த மார்பகங்களை பெற்றிருந்தாலும் போர்க்களதில் வீரம் செறிந்த செயல்களினால் உனது மார்பு விரிந்து படந்து இருந்தாலும் நீ வீதி வழி நடகையிலே

நான் மட்டுமின்றி ஏனைய பெண்டீரும் பார்த்து காமத்தினால் ஏற்படும் மோகத்தினால் தனை மறந்து இவன் எனக்குறியவன் (தன்னைசொல்கிறாள்) என்ற என்னமற்று பார்ப்பதனால்

எனது காதலனே இனி எவ்வாறு உனது அந்த வீரம் செரிந்தமார்பினை நான் தழுவுவது என்று தன் காதலனை கோபம் கொள்கிறாள்

இன்றளவும் நம் பெண்கள் தன் கனவனை இன்னொரு பெண்ணிற்க்கு கனவிலும் கூட விட்டுதரமாட்டாள் என்பது தானே உண்மை

என்ன அழகான வரி இதுவரையில் பெண்களை மட்டுமே...அழகு பதுமையாக போகப்பொருளாக வர்னிக்கும் புலவர்களை பார்த்திருப்போம் இப்படி ஒரு ஆண்மகனை தன் காதலனின் அழகை ஒரு பெண்இரசிப்பதை இதைவிட அழகாக யாரும் சொன்னதில்லை

வள்ளுவம் வாழ்வியலை காதலை உணர்வுபூர்வமாக தமிழுகே உரியதன்மையில் மிக அற்புதமாக சொல்லியிருக்கிறது...

தினமும் திருக்குறள் படியுங்கள் வாழ்வியலின் உன்னதம் உணருங்கள்
வள்ளுவனாக வாழுங்கள் வள்ளுவத்தைப் போற்றுங்கள்

வாழ்க வள்ளுவம் வளர்க எம் குலம்

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், உலக வள்ளுவர் குல பேரவை
9994724447 7373290884 9944007979

No comments:

Post a Comment