Sunday 18 August 2013


உலக வள்ளுவ குல இளைஞர் தலைவர்
=====================================
 அவர்களின் உரை (19.08.2013)
==========================
சாதிவெறி எங்களுக்கு இல்லை... 
தமிழனின் வரலாற்றைச்சொல்ல வேறு வழியும் இல்லை ஆதலால் கூறுகின்றோம் உலகத்தின் தொன்மையான மதம் வள்ளுவம் உண்மையான தமிழன் வள்ளுவனென்று...
                                                                    -ஹரி வள்ளுவன் 

இன்று என்னிடம் ஒரு அன்பர் கேட்டார் திருவள்ளுவர் என்பவர் முற்போக்குவாதி நீங்களும் அப்படிபட்டவர் ஆனால் இன்று நீங்களோ ஒரு குறிப்பிட்ட(உங்கள்) சாதியின் இளைஞர் பேரவை தலைவராக இருக்குறீர்கள்  உங்கள் மக்களை மீண்டும் பிற்போக்கான வழிக்கு கொண்டு செல்கின்றீர்கள் என்று....

இதற்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும் எப்படி சொல்லவது....
ஆதலால் சொல்கின்றேன் நாங்கள் யாறென்று

வள்ளுவன் என்பது சாதியல்ல அது ஒரு வாழ்வியல் நெறி அதனை பின்பற்றுபவன் வள்ளுவன் எனவே அவன் அவ்வாறு அழைக்கப்பட்டான்
வள்ளுவன் என்பவன் அறிவுடையவன் சான்றோன் இன்றுவறை அதனால்தான் சாதி என்ற வார்த்தையை நாங்கள் எங்கும் பயன் படுத்துவதில்லை... வள்ளுவ குலம் என்றுதான் சொல்லிவருகிறோம் ஏன் தெறியுமா?

ஓரு சிறந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பின் பற்றி அதன்படி வாழ்ந்து வரும் ஓழுக்கமான ஓரு கூட்டம் அதன் படி தன் வாழ்வியலை அமைத்துகொள்ளும் அறிவார்ந்த மக்களின் ஒருங்கிணைப்பை இப்படி அழைக்கலாம் அதுதான் "குலம்"

கணித முறைகோட்பாட்டிலும் இதற்கு அர்த்தம் அதுவே....
 இயற்கணித அமைப்புக்கள் பற்றி ஆராயும் நுண் இயற்கணிதத்தின் ஒரு பிரிவு "குலம்" இது ஆகும்.

 வள்ளுவம் என்பது ஒரு குலம் அதற்கென்றுஒரு தனித்துவம் உண்டு அந்த மக்களுக்கென ஒரு பண்பாடு கலாச்சாரம் உண்டு

சாதி என்ற அதர்மத்தை நாங்கள் ஏற்கவில்லை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது குலத்தில் இல்லை, 

சாதிபற்றி போதிக்கும் அனைவரும் தங்களின் உண்மையான வரலாற்றை ஆய்வுசெய்யுங்கள் எந்த சாதியும் உயர்வு தாழ்வை போதிக்கவில்லை ஆதரிக்கவும் இல்லை.

 சாதி என்பது வர்ணா சிரமக் கொள்களையினால் வந்ததென்பது உண்மை இன்று உங்களை எவ்வாறு அழைத்துக்காள்வீர்கள் எல்லா சாதியினரும் எல்லாலத் தொழிலும் கற்றுத் தேர்ந்தவர்கள்,

 அப்படியானால் டாக்டர் தொழில் செய்பவர்கள் டாக்டர்சாதி, இன்ஜினியர் எல்லாம் இன்ஜினியர் சாதி, வக்கீல்கள் எல்லாம் வக்கீல் சாதி, திருடுபவன் எல்லாம் திருடன் சாதி, பிறர் பொருளை உழைக்காகமல் அபகரிப்போர் கொள்ளைகார சாதி, அரசியல் வாதி எல்லாம்....? 

சாதி என்பதை இன்றைக்கும் நாங்கள் ஏற்கவில்லை நாங்கள் ஓரு குலம் சார்ந்தவர்கள் வள்ளுவம் எங்களின் வாழ்வியல் நெறி

எவன் ஒருவன் மற்றொருவனை ஏறிமிதித்து தான் உயரவேண்டும் என்று நினைக்கின்றானோ அவனது எண்ணமும் உழைப்பும் தான் மிதித்துகொண்டுள்ளதாக நினைக்கின்றவன் மீதுதான் (தாழ்ந்தே) இருக்கும்
மிதிப்ட்டுள்ளவனாக நினைக்கும் அவனது நினைவு மேலே உள்ள வனை நோக்கியிருக்கும் (உயர்ந்து)  மேலே எழுவதற்கான உத்வேகம் இருக்கும் இதுதான் வாழ்வியலின் தத்தவம்

வள்ளுவம் சொல்வது 3 குலம் 1. வலிமைபடைத்தோர் (அறமுடையோர்), 2. சான்றோர் (அறிவுசார் குலம்) 3. சராசரி மக்கள் அதாவது லவ்கீக வாழ்கை வாழ்பவர்கள் இவர்களுக்காக பாடுபடும் கூட்டமே 1 மற்றும் 2

அறம்,பொருள், இன்பம்
அரசியலார்கள், சான்றோர்கள், குடிமக்கள்

இந்த 3 க்கும் 3 அதிகாரங்கள்  மன்னன், மந்திரி, மக்கள் இந்த 3 குலம் மட்டும்தான்  மனிதகுலம்

திருவள்ளுவன் அன்றே இதைதானே சொன்னார்கள்
1330 குறல் வரிகளிள் எங்காவது சாதியைபற்றியோ...
அதன் பொருட்டுத்தோன்றும் தீண்டாமைபற்றியோ..
முடநம்பிகை ஆதரிக்கும் விதமாக இருக்கிறதா?

ஒரு வரியையாவது  உங்களால் குறைசொல்ல முடியுமா இந்து, இஸ்லாம், கிருத்துவம், பௌத்தம் எம்மதமும் ஏற்கவல்ல ஒரு நன்நெறி வள்ளுவம் மட்டும்தான்

வள்ளுவம் என்பது கடினமான ஒன்று இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஆழமாக போதிப்பது பல 100 ஆண்டுகள் கடந்து வந்தும் இன்றளவும் மங்காத புகழைகொண்டுள்ள ஒன்று

அதன் வழித்தோன்றல்கள் நாங்கள் தமிழனென்ற கர்வம் எங்களுக்கு அதிகம் உண்டு தமிழனின் வரலாற்றை வள்ளுவன் இன்றி யாரும் ஏற்க முடியாது நான் சாதியை கையில் எடுக்கவில்லை மற்ற குலத்தவர்களை  குறைகூறிவாழும் முட்டாளாக வெறியனாக எப்பொழுதும் இருந்ததில்லை.

 நான் வள்ளுவன் வள்ளுவத்தை எடுத்துக்கொண்டேன் நான் ஒரு சாதி இளைஞர்களின் தலைவன் அல்ல அறிவுசார் கூட்டத்தின் சான்றோர்களின் பிரதிநிதி...

வள்ளுவம் வளர்த்த சான்றோர்களின் வழித்தோன்றல் நான்
ஆதலால் நானும் வளர்க்கின்றேன் எனது மதத்தினை வள்ளுவத்தினை
வள்ளுவனாக... ஒரு முற்போக்குவாதியாக

ஓழுக்கம் எங்கள் குருதியில் கலந்தது நன்நெறி
எங்கள் முப்பாட்டன் தந்தது

"வள்ளுவ மதம்" மதம் என்பது இறைவனை (அ) வாழ்வியலை முறையாக அடைவதற்கான வழி "வள்ளுவம்" என்பது என் மதம் திருக்குறள் எனது மதத்திற்கான வழிகாட்டும் புத்தகம்


வள்ளுவத்தைபோற்றுங்கள்
வள்ளுவத்தை வாழ்த்துங்கள்
வள்ளுவத்தை சொல்லிக்கொண்டேயிருங்கள்
வள்ளுவம் ஒரு மந்திரச்சொல்
வள்ளுவனை போற்றாத நாடும் வீடும்
வளம்பெறமுடியாது
வள்ளுவம் வள்ளுவன் மந்திரச்சொல்
வாழ்வை வளம்பெறசெய்யும் 
சக்தியுடையது வாழ்க வள்ளுவம்
வளர்க வள்ளுவன்

வெ.ஜெ.ஹரிஹரசுதன்
தலைவர், 
உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை அறக்கட்டளை  
+91 9994724447, 7373290884, 9944007979
www.valluvankulam.org




2 comments:

  1. சூப்பரு டக்கரு செம தூள்

    ReplyDelete
  2. வெட்கங்கெட்டவைங்க மானங்கெட்டவைங்க வள்ளுவர் இனத்தின் பெயரை முன் வைத்து உறவாட நினைக்குறாய்ங்க கேவலப்பட்டவைங்க

    ReplyDelete